குஜராத் கலவரத்தின்போது மோடி அரசின் கோரமுகத்தை புலனாய்வு செய்தி உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டிய பத்திரிகையாளர் ராணா அயூப்பின் தைரியத்தை பாராட்டி அமெரிக்காவின் ஜோர்ஜியா பல்கலைக்கழகம் மெக்கில் விருதை அவருக்கு வழங்க உள்ளது
கடந்த 2002 முதல் 2010 வரை குஜராத்தில் நடந்த படுகொலைகள் போலி என்கவுண்டர்கள் குறித்து உண்மையை வெளிக்கொண்டுவர தன் உயிரை பணயம் வைத்து புலனாய்வு பத்திரிகையாளராக பணியாற்றியவர் ராணா அயூப். அவர் தெஹல்கா இதழில் பணியாற்றிய போது கடந்த 2002இல் இஸ்லாமியர்களுக்கு எதிராக குஜராத்தில் நடந்த படுகொலைகள் குறித்து `Gujarat Files: Anatomy of a Cover Up என்ற நூலை எழுதியுள்ளார் குறிப்பாக தன் மைதிலி பெயரை என மாற்றிக் கொண்டதோடு உருவத்திலும் பல மாற்றங்களை செய்து கொண்டு , `undercover journalism' மேற்கொண்டார். சட்டவிரோத கொலைகள் மற்றும் மதவாத வன்முறைகளை குறித்த உண்மைகளை வெளியே கொண்டு வந்த விதத்தை அவர் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார். கலவரத்தின்போது குஜராத் உள்துறை செயலாளராக இருந்த அசோக் நாராயணன் என்பவரை பேட்டி எடுத்து இந்த நூலில் வெளியிட்டிருந்தார். அந்த நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு குஜராத் கோப்புகள் மறைக்கப்பட்ட கோர வடிவங்கள் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது இந்தப் புத்தகம் மோடி அரசின் எதேச்சதிகாரம் குறித்து சரமாரியான குற்றச்சாட்டுகளை வைக்கிறது அவருடைய தைரியத்தை பாராட்டி அவருக்கு மெக்கில் விருதை ஜோடியா பல்கலைக்கழகம் வழங்க உள்ளது இந்த விருது வழங்கும் விழா வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி ஆண்டர்சன் மன்றத்தில் நடைபெறும் என்று அந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த 14 ஆண்டுகள் பத்திரிகையாளராக இருந்த அவருக்கு 2017 -ம் ஆண்டில் புலனாய்வுப் பத்திரிகைக்கான குளோபல் ஷைனிங் லைட் விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.