tamilnadu

img

நடையாய் நடக்கும் பெண்கள் : குடிக்கத் தண்ணீரில்லாத குஜராத் மாநிலம்

அகமதாபாத்:

இந்தியா முழுவதுமே குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது என்றாலும், பாஜக ஆட்சியில் சொர்க்கபுரியாக மாறிவிட்டது என்று கதைவிடப்பட்ட குஜராத்திலும், இப்போதுவரை பெண்கள் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் நடையாய் நடக்கும் அவலம் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


குறிப்பாக, குஜராத்தின் வல்சாத் பகுதி மக்கள், குடிநீருக்காக ஜீவமரண போராட்டமே நடத்திக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இங்குள்ள தராம்பூரில் உள்ள கிராமம் கோர்வாட். அன்றாடங் காய்ச்சிகளை கொண்ட கிராமம். வேலைக்குச் சென்றால்தான் அடுத்த வேளை உணவு என்ற சூழல் அங்கே நிலவுகிறது. ஆனால் இவர்களுக்கு குடிப்பதற்குக் கூட தண்ணீர் இல்லை. 


அங்கு வசிக்கும் பெண்கள் அனைவருமே பகலில் வேலைக்குச் செல்கின்றனர். ஆனால் இரவில் நிம்மதியாக அவர்களால் உறங்க முடியாது. குடிநீருக்காக கண்விழித்து காத்துக் கிடக்க வேண்டும்.“'எங்களின் பகுதியில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. நாங்கள் பகலில் வேலைக்குச் சென்றுவிட்டு, இரவில் குடத்தில் தண்ணீர் கொண்டு வருவோம். இங்கு குழாய்கள் எதிலும் தண்ணீர் வருவதில்லை. அதனால் அடிபம்ப்பில் வரிசையாகக் காத்திருந்து தண்ணீர் அடிப்போம். நிறையப் பேர் வருவதால் கூட்டம் அதிகமாக இருக்கும். எப்படியும் ஒரு குடம் தண்ணீரைப் பிடிக்க, இரண்டு மணி நேரமாவது ஆகும். அரசு எப்போதுதான் எங்களின் கஷ்டத்தைத் தீர்க்கப் போகிறது?” என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.