tamilnadu

img

குஜராத்: 24 மணி நேரத்தில் 2 முறை நிலநடுக்கம்

குஜராத்தில் 24 மணி நேரத்தில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரின் அருகே இன்று மதியம் 12.57 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ராஜ்கோட்டில் இருந்து வடமேற்கில் சுமார் 82 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 அலகாக பதிவாகியிருந்தாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் கட்டிடங்கள் சேலாக குலுங்கின. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட தேச விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த 24 மணி நேரத்தில் 2வது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, நேற்று காலை கட்ச் பிராந்தியத்தில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.