tamilnadu

img

கீழடி அகழாய்வின் தொடர்ச்சி

கி.பி 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க நாணயம் அகரத்தில் கிடைத்துள்ளது

மதுரை, ஜூன் 19- கீழடி அகழாய்வின் தொடர்ச்சியான அகரத்தில் கி.பி 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க நாணயம் கிடைத்துள்ளது.  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி யில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணியைக் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி காணொலிக் காட்சி மூலம்  தமிழக முதல்வர் தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து கீழடி, அகழாய்வுப் பணி தொடங்கிய சில நாட் களில், கடுமையான மழைப்பொழிவு மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக அக ழாய்வுப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டு மீண்டும் பணிகள் முழுவீச்சில் தொடங்கின. அதனைத் தொடர்ந்து மணலூரில் உலை போன்ற அமைப்பும் கீழடியில் பெரிய அளவிலான விலங்கின் எலும்புகளும் கொந்தகையில் முதுமக்கள் தாழியும் மனித எலும்புகளும் கிடைத்தன. இந்நிலையில் அகரத்தில் கி.பி- 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க நாணயங்கள் கிடைத்து ள்ளன.

இதனால் கீழடி 6-ம் கட்ட தொல்லியல் ஆய்வில் 4 இடங்களிலும் முக்கியமான தொல்லி யல் எச்சங்கள் கிடைத்திருப்பதாக தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழகத் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் பேசியபோது, “ அகரத்தில் ஒரு தங்க நாணயம் கிடைத்துள்ளது. இந்த நாணயம் 1 செ.மீ அளவீடு கொண்டது. 300 மி.கி எடையைக் கொண்டுள்ளது. இது கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இந்த நாணயத்தின் முன்பக்கத்தில் நாமம் போன்றும் நடுவில் சூரியன் அதன் கீழே சிங்க உருவமும் காணப்படுகின்றன. பின்பக்கம் 12 புள்ளிகள் அதன்கீழ் இரண்டு கால் மற்றும் இரண்டு கைகளுடன் கூடிய உருவம் காணப்படுகின்றது. இக் காசு வீரராயன் பணம் என்று பொதுவாக அழைக்கப் பட்டுள்ளது” என்றனர். கீழடி 2300 வருடங்களுக்கு முற்பட்டது. இங்கு பெரிதாக தங்க நாணயங்கள் கிடைத்ததில்லை. தற்போது கீழடியின் தொடர்ச்சியாக அகரத்தில் கடந்த வாரம்  17-ம் நூற்றாண்டு தங்க நாணயம் கிடைத்துள்ளது.

;