tamilnadu

img

அதிமுக வேட்பாளர்களுக்கு பாடம் புகட்டுவீர்! கிருஷ்ணகிரி, ஓசூரில் இரா. முத்தரசன் பிரச்சாரம்

கிருஷ்ணகிரி,ஏப்.13-மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஓசூர், தேன்கனிக்கோட்டை வட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் பிரச்சாரம் மேற்கொண்டார். தேன்கனிக்கோட்டை வட்டம், ஜூஜூவாடி, ஓசூர், ராம் நகர், பார்வதி நகர் ஆகிய பகுதிகளில் நடந்த பிரச்சாரக் கூட்டங்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் டி. ராமச்சந்திரன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எம். லகுமையா, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் மாதையன், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், “தமிழகத்தில் எடப்பாடி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதற்கு பொள்ளாச்சியே சாட்சி” என்றார்.தமிழகம் ‘குரங்கு கைகளில் கிடைத்த பூ மாலை’ யாக மாட்டிக் கொண்டுள்ளது. கடந்த மக்களவை தேர்தலின்போது தருமபுரியில் சொந்த கட்சி வேட்பாளருக்கு துரோகம் செய்ததால் அமைச்சர் பதவி மட்டுமல்ல கட்சி பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டவர்தான் இன்றைக்கு கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியின் வேட்பாளராக அதிமுகவினர் அறிவித்திருக்கிறார்கள். கே.பி. முனுசாமிக்கும், எடப்பாடி-ஓபிஎஸ் அணிக்கும் தக்க பாடம் புகட்டவும், மக்கள் போராட் டத்தின்போது பேருந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக தண்டனை பெற்று அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை இழந்த பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவியை தற்போது வேட்பாளராக்கியுள்ளனர். எனவே, கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி மற்றும் ஓசூர் சட்ட மன்ற தொகுதி மக்கள் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களான மருத்துவர் ஏ.செல்லகுமாருக்கு கை சின்னத்திலும், திமுக வேட்பாளர் எஸ்.ஏ. சத்யாவுக்கு உதயசூரியன் சின்னத்திலும் வாக்களித்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று இரா.முத்தரசன் கேட்டுக்கொண்டார்.

;