tamilnadu

img

தரமற்ற சாலை அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

அவிநாசி, நவ. 21- அவிநாசி அருகே தரமற்ற சாலை அமைக்கும் பணி நடைபெறுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள னர். அவிநாசி ஒன்றியம், நடுவசேரி ஊராட்சிக்குட்பட்ட வர தராஜ் நகர் காலனி உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை  அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியின்போது குப்பை மண் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் ஒப்பந்ததாரரிடம் முறையிட்டனர். தகவலறிந்த ஊராட்சி செயலாளர் மணி கண்டன் அப்பகுதிக்குச் சென்று தரமான முறையில் சாலை அமைக்கப்படும் என உறுதியளித்த பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

;