tamilnadu

img

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர் 

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ,ஊத்தங்கரையில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம்  ,ஊத்தங்கரையில் உள்ள சிங்காரப்பேட்டை என்ற பகுதியில் வசிப்பவர் இந்திரா. அவரின் மகள் மகாலட்சுமி , பேத்தி அவந்திகா( 3) . இன்று காலை இந்திரா தனது பேத்தியைத் தூக்கி வைத்தபடி தனது வீட்டின் கொடி கம்பியில் துணிகளைக் காயப் போட்டுள்ளார் . அப்போது எதிர்பாராத விதமாக அருகே இருந்த மின்சாரக் கம்பி மீது ஈரத் துணிகள் பட்டதால் இருவரையும் மின்சாரம் தாக்கியுள்ளது. உயிருக்குப் போராடும் நிலையிலிருந்த அம்மாவையும் மகளையும் காப்பாற்றச் சென்ற மகாலட்சுமியும் மின்சாரம் தாக்கியது . மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த சிங்காரபேட்டை காவல்துறை , மூவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் , இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   

;