ஓசூர், நவ. 24 - ஓசூர் வட்டம், தேன்கனிக்கோட்டை சாலை யில் சாந்திநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், ஞாயிறன்று (நவ.24) மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு ள்ளது. இந்நிலையில் சிறப்பு வகுப்பிற்கு வந்த 5 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை பள்ளி தாளாளர் குருதத்தன் அறைக்கு அழைத்துள்ளார். மாணவி அறைக்கு சென்ற சிரிது நேரத்திலேயே அலறல் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் சென்று பார்த்துள்ளனர். பின்னர் பெற்றோர்களு க்கும் இது பற்றி தகவல் தெரி வித்துள்ளனர். பள்ளிக்கு வந்த பெற்றோர் மாணவியி டம் விசாரித்தபோது, தாளாளர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரி வித்தார். இதனைத் தொடர்ந்து பெற்றோர் பள்ளி தாளாளரை கைதுசெய்ய வேண்டும் எனக் கோரி ஓசூர் காவல் துறையில் புகார் அளித்துள்ள னர். அதனடிப்படையில் காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர். இது பற்றி தகவல் அறிந்த மாதர் சங்க மாவட்டச் செய லாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மாவட்டத் தலைவர் வெண்ணிலா, சிபிஎம் ஓசூர் வட்டச் செயலாளர் பி.ஜி.மூர்த்தி பள்ளி தாளாளரின் இந்த செயலுக்கு கண்டம் தெரிவித்துள்ளனர். மேலும் போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.