கிருஷ்ணகிரி, ஆக. 21 - பர்கூர் அருகே, போலி என்சிசி பயிற்சி முகாமில் 13 வயது பள்ளிச் சிறுமி, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை செயலாளர் சிவா என்ற சிவராமன் (தற்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்), தனியார் பள்ளி தாளாளர் உட்பட மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இதே சிவராமன் உள்ளிட்ட நபர்கள், கடந்த காலங் களிலும் போலி என்சிசி முகாம்களை நடத்தி, சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி யிருப்பதாக வெளியான தகவல் கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனவே, இதுதொடர்பாக சிபி சிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; குற்றவாளிகளுக்கு கடு மையான தண்டனைகளைப் பெற்றுத் தர வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் கே. பாலகிருஷ் ணன் மற்றும் தலைவர்கள் பலர் வலியுறுத்தி இருந்தனர்.
15 நாட்களுக்குள்
முழு விசாரணை
இந்நிலையில், பர்கூர் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி நடவடிக்கைகள் எடுப்பதற்கு பவா னீஸ்வரி ஐபிஎஸ் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு (SIT), சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஐஏஎஸ் தலைமையில் பல்நோக்கு குழு (Multi Disciplinary Team - MDT) என இரண்டு குழுக்களை அமைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.
இதில் சிறப்புப் புலனாய்வு குழு விசாரணையை துரிதமாக மேற்கொண்டு, 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
“கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக் குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், என்சிசி திட்டத்துக்கு மாணவர்களை தயார்ப்படுத்துவதற்கான முகாம் பள்ளி நிர்வாகத்தால் நடத்தப் பட்டது. இந்த முகாமில், போலி யான பயிற்றுநர்கள் கலந்து கொண்டு, அங்கு பயிலும் பள்ளி மாணவிகள் சிலரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள னர்.
இதுவரை 11 பேரை கைது செய்த காவல்துறை
இந்தச் சம்பவம் தொடர்பாக, பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட என்சிசி பயிற்றுநர்கள் ஆறு பேரில், ஐந்து பேரும், இந்த சம்பவத்தைக் காவல்துறைக்குத் தெரிவிக்காமல் மறைத்த பள்ளியின் நிர்வாகத்தி னர் நான்கு பேரும் கைது செய்யப் பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும், வழக்கின் முக்கிய குற்ற வாளி சிவராமனுக்கு அடைக்கலம் கொடுத்து போலீசாரின் கைது நட வடிக்கைக்கு எதிராக செயல்பட்ட இரு நபர்களும் கைது செய்யப் பட்டுள்ளனர்.
மேற்கூறிய போலியான என்சிசி பயிற்றுநர்கள் இதே போன்று, மேலும் சில பள்ளிகளிலும் கல்லூரி களிலும், இத்தகைய பயிற்சி வகுப்பு களை மேற்கொண்டதாகத் தெரிய வந்துள்ளது. இந்தப் பள்ளிகள், கல்லூரிகளிலும் மேற்கூறிய பாலி யல் அத்துமீறல்கள் நடந்துள்ளதா, என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தடுப்பு நடவடிக்கைகளை ஆராயவும் அரசு உத்தரவு
இந்த சம்பவங்களைப் பற்றி முழுமையான விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் தக்க நட வடிக்கைகளை எடுக்கும் வகை யில், பவானீஸ்வரி ஐபிஎஸ் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு (Special Investigation Team - SIT) ஒன்றை அமைத்திட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை கள் மற்றும் அவர்களின் பெற் றோர்களோடு கலந்தாலோசித்து, அவர்களின் நலன் காத்திட தேவையான நடவடிக்கைகள் குறித்தும், இந்த சம்பவம் ஏற்படக் காரணமாக இருந்த சூழ்நிலைகள் குறித்து ஆராய்ந்து, இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுப்பது குறித்தும், உரிய பரிந்துரைகளை அளித்திட, சமூகநலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஐஏஎஸ் தலைமையில் பல்நோக்கு குழு (Multi Disciplinary Team MDT) ஒன்றை அமைத்திடவும் ஆணையிட்டுள்ளார்.
60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை
இக்குழுவில், மாநில சமூக பாதுகாப்பு ஆணையர் ஜானி டாம் வர்கீஸ் ஐஏஎஸ், பள்ளிக்கல்வி இயக்குநர் லதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த், மனநல மருத்துவர்கள் பூர்ண சந்திரிகா, சத்ய ராஜ், காவல்துறை ஆய்வாளர் லதா, குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர் வித்யா ரெட்டி ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். மேற்கூறிய சம்பவம் குறித்த விசாரணையை துரிதமாக மேற்கொண்டு, 15 நாட்களுக்குள் அனைத்து நட வடிக்கைகளையும் முடிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்கு களின் விசாரணையை விரைந்து முடித்து 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, கடும் தண்டனையை பெற்றுத்தரவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.”