tamilnadu

img

விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கல்

ஊத்தங்கரை, மே 9- காட்டேரி ஊராட்சியில் உள்ள ஏழை மற்றும் கூலித்தொழிலாளர்க ளுக்கு அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. கொரோனா நோய் தொற்றின் காரணமாக அரசு ஊரடங்கு பிறப்பித் துள்ளது. இதனால் கடந்த ஒருமாத காலமாக ஏழைகள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர். இதனை கருத் தில் கொண்டு ஊத்தங்கரை வட்டம், காட்டேரி ஊராட்சியில் வறுமையில் உள்ள ஏழைகள் கூலிதொழிலாளர் கள், நறிகுறவர் மற்றும் இருளர் சமூ கத்தைச் சேர்ந்த 100 குடும்பங்க ளுக்கு தலா 10 கிலோ அரிசியை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத் தின் மாவட்ட செயலாளரும், காட் டேரி ஒன்றிய கவுன்சிலருமான வி.கோவிந்தசாமி வழங்கினார். இந் நிகழ்ச்சியில் விவசாய தொழிலா ளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் செல்வராஜ், நிர்வாகிகள் சுப்பிரமணி, சிவராஜ், ராஜ்கண்ணு அர்சுணன்  ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.