tamilnadu

img

கிருஷ்ணகிரி போக்சோ வழக்கு - நா.த.க நிர்வாகி கைது!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போக்சோ வழக்கில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே தனியார் பள்ளியில் நடந்த என்.சி.சி முகாமில் பங்கேற்ற அப்பள்ளி மாணவியை (12 வயது) பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன் தலைமறைவாக இருந்த நிலையில், கோவையில் இன்று அவர் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே குற்றத்திற்கு உடந்தையாக இருந்த பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், தாளாளர் சாம்சன் உள்ளிட்ட 7 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.