tamilnadu

img

நரிக்குறவர் இன மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் உதவி

ஊத்தங்கரை, ஜூன் 19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்ச்சி யால் நரிக்குறவர் இன மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு புத்தகம் உதவிகள் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், காட்டேரி அருகே புறம்போக்கு நிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். இவர்கள் ஊர் ஊராக சென்று ஊசி,பாசி மணி விற்று சொற்ப வருவாயில் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இங்குள்ள மாண வர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன் முயற்ச்சியால் இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட் டது

 இந்நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், காட்டேரி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் வி.கோவிந்தசாமி, இந் திய மாணவர் சங்க மாவட் டதுணைத் தலைவர் தமிழ் அமுதன், அம்பேத்கர் மன்ற நிர்வாகிகள் உதயா, அருள்செல்வன், தினேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.