tamilnadu

செய்தித் துளிகள்

கேமரா

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் சுமார் ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான 38 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

கொள்ளை

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு  உட்பட்ட டி. சுண்ணாம்புக்கல் பகுதியில் வசிக்கும் சிவாஜி (60) என்பவரின் வீட்டிற்குள் புகுந்து   பீரோவை உடைத்து 12  சவரன் நகைக கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகளை ஆட்சியர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடனுதவி

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் மூலம் புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்களுக்கு தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செட்டியந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் தனபால் (46) ஆடு மேய்க்கும் போது மின்வேலியில் சிக்கி பலியானார்.