கிருஷ்ணகிரி, ஆக. 9- ஓசூர் பைரவி கலைக்கூடமும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் இணைந்து நடத்திய இயக்குநர் லெனின் பாரதியுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை பைரவி கலைக் கூடத்தின் நிறுவனரும் தமுஎகச கிளைத் தலைவருமான சுப்பையாசிவா துவக்கி வைத்தார். ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ திரைப்படத்தின் இயக்குநர் லெனின் பாரதி தனது துவக்க உரையில்,“ யாரும் யாரையும் பார்த்து பெரியவர், சின்னவர் அழகு கதாநாயகன் என வியக்கவோ, பிரம்மிக்கவோ வேண்டியதில்லை. பொது புத்தி குறிப்பாக குழந்தைகளின் அறிவு வளர்ச்சியையும் முடக்கும் அரசியல் பற்றிய புரிதல் அவசியம். யாராவது நம்மை காப்பாற்று வார்கள் என ஒலிந்து, ஒதுங்கியிருப்பது பெரும் ஆபத்து” என்றார். ஒரு வடை காசு கொடுத்து வாங்கும்போது அது கெட்டுப் போயிருந்தால் என்ன செய்வோம்? ஒட்டு மொத்த கலைகளையும் விழுங்கியுள்ள மலைப் பாம்பு போன்ற சினிமாவும் சமூகத்திற்கு நன்மை ஏற்படுத்தவில்லை இல்லை என்றால் கோபம் வர வேண்டாமா? இக் கேள்விகளின் வெளிப்பாடு தான் அப்பகுதியில் வாழ்க்கை போராட்டம் நடத்தி வரும் உழைப்பாளிகளையே வைத்து எடுக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை என்றும் லெனின் பாரதி தெரிவித்தார். நவீன மயம், உலகமய தாக்கம் அன்பை, உணர்வுகளை பரிமாறிக் கொள்ளும் மனிதத் தொடர்புகள் கூட எந்திரத்தனமான தொடர்பாக மாற்றப்பட்டுள்ளது. (வாட்ஸ் ஆப், முகநூல், குறுந் செய்தி, வீடியோ கால்) கார்ப்பரேட் நவீன எந்திரங்களால் முதலாளிகளுக்காக வேலை சுலபமாக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பும் பறிக்கப்படுகிறது. ஆனால் இப்போதும் குஜராத் உட்பட பல மாநிலங்களில் தலித்துகளை மலம் எடுத்து சுமக்க வைப்பது மட்டும் மாறவில்லையே ஏன்? என்று ஆதங்கப்பட்டார். எல்லாம் இந்துக்கள்தான் சரி.. தலித்துகள் கோவிலுக்குள் நுழைய விடுவதில்லையே ஏன்? எனக் கேள்விகள் கேட்க வேண்டும். நமது மவுனம் தான் ஆகப்பெரிய கொடூரம், ஊழல், பெண்கள் மீதும் தலித்துகள் மீதும் உழைப்ப வர்கள் மீதும் தாக்குதல் நடப்பதற்கு காரணமாகிறது. சாதி, மதப் பெருமைகளை பேசி மக்களை கூறு போடுபவர்களை அரசு கண்டு கொள்வவதில்லை. சாதி, மதத்திற்கு எதிராக பேசினால் அரசாங்கமும், மதவெறியர்களும் எதிர்க்கிறார்கள். கேடுகெட்ட சாதி, மத, வேறுபாடுகளிலிருந்து மக்கள் வெளியே வர வேண்டும் என்றும் வேண்டுகேள்விடுத்தார். சாதியென்பது மன நோய் என்றார் அம்பேத்கர். மதம் மக்களை முட்டாளாக்கும் என்றார் பெரியார். ஆனால் அவர்களின் சிலைகளையே உடைக்கிறார்கள் சமூக விரோதிகள். காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிபா மனித மிருகங்கள் சிலரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். குற்றம் செய்தவர்களை காப்பாற்றத் துடிக்கிறது அரசும், மதவாத கூட்டம். ஒரு இஸ்லாமியரை ஹேராம் சொல்லச் சொல்லி ஆர்எஸ்எஸ் காரன் அடித்தே கொள்கிறான். பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு கூட போட விடாமல் மிரட்டப்படுகிறார்கள். நமது குடும்பத்தில் அப்படி நடந்தால் என்ன செய்வோம்.? கோபம் வர வேண்டாமா? இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதி கேள்வி கேட்ட சினிமா துறையினரை மிரட்ட தேசதுரோக வழக்கு போடுகிறார்கள். நம் உரிமையை மறுக்கும் இச்செயல் கண்டனத்துக்குறியது. திரும்பப் பெற வேண்டும் என்றும் லெனின் பாரதி கூறினார். பின்னர் கலந்துகொண்டு நேயர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்நிகழ்வில் ஆர்க்கி டெக்ட் பிரதீப் ராஜ், டிசைனர் அச்சுதன், கிச் இன் வேர் ஐடி துறை பிரியா, ஆகியோரும் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளித்தனர். தமுஎகச மாவட்டச் செயலாளர் பழ. பாலசுந்தரம், எழுத்தாளர்கள் பெரியசாமி, ப.வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஜீவா பிராசஸ் ஏங்கல்ஸ், ரத்தனா கார்ட்ஸ் செந்தில் உட்பட சிறந்த செயல்பாட்டாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.பைரவி கலைக் கூடத்தின் முன்னாள் மாணவர்கள் குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பைரவி கலைக்கூடத்தின் இயக்குனர் வைசாலி சிவா நன்றி கூறினார்.