tamilnadu

img

அடிப்படை வசதிகள் இல்லாத ஓசூர் அரசு கலை கல்லூரி மாணவர் சங்க நிர்வாகிகள் சாராட்சியரிடம் மனு

கிருஷ்ணகிரி, பிப். 8- ஒசூர் கலை அறிவியல் கல்லூரியில் அடிப்  படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்  என்று மாணவர்கள் கேரிக்கை விடுத் துள்ளனர். ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு துவங்  கப்பட்டது. அரசு மேல்நிலைப் பள்ளி வளா கத்தில் கல்லூரி செயல்பட்டு வந்தந்தது. 3 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரிக்கென்று புதிதாக மிடு கரப்பள்ளி அருகில் கட்டிடம் கட்டப்பட்டு அங்கு செயல்பட்டு வருகிறது. இந்தக்கல்லூரியில் இரண்டு ஷிப்டு முறை யில் நடைபெற்று வருகிறது. சுமார் 800 மாண விகள் உட்பட ஆயிரத்து 500க்கும் மேற்  பட்டோர் படித்து வருகின்றனர்.ஆனால், போதிய  வகுப்பறைகள், பேராசிரியர்கள் இல்லாத  நிலை உள்ளது. துறை தலைவர்கள், சிறப்பு ஆசிரியர்களை நியமிக்காமல் உள்ளனர். கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவ களுக்கு தலா 2 கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. அங்கு தண்ணீரும் வருவதில்லை. சுத்தப்படுத்துதுவதற்கு பணியாள்களும் இல்லாததால் கழிப்பறைகள் துர்நாற்றம் வீசுகின்றன. மாணவிகளுக்கு நாப்கின் எரிக்கும் இயந்திரம் கூட இல்லை.  மாண வர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், உண வருந்தும் இடம் கூட இல்லை. நூலகம், மாண வர்கள் விடுதி, விளையாட்டுத் திடல் வசதி யின்றி உள்ள கல்லூரியின் பின்பகுதியில், சுமார் மூன்று ஏக்கர் நிலம் குண்டும் குழியு மாக புதர் மண்டி கிடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்திய மாணவர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் இளவரசன் தலை மையில் மாணவர்கள் சென்று சாராட்சியரி டம், கல்லூரிக்கு தேiயான அடிப்படை வசதி களை செய்து தரக்கோரி மனு அளித்தனர்.