tamilnadu

கிருஷ்ணகிரி பாரத் பள்ளி மாணவர்கள் சாதனை

கிருஷ்ணகிரி, மே 7- பத்தாம் வகுப்பு பொது தேர்விலும் கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். இந்த பள்ளி மாணவர்கள் மேல் 10 பேர் 480 மதிப்பெண்களுக்கும் அதிகமாக எடுத்திருக்கிறார்கள். 470க்கு மேல் 13 பேரும், 450 க்கு மேல் 47 பேரும், 400க்கு மேல் 72 பேரும் பெற்றுள்ளனர். 10 மாணவர்கள் சமூக அறிவியலில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு விஜயலட்சுமிபதிக்கு நிறுவனர் மணி நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தினார்.இந்த வெற்றிக்கு காரணமான மாணவர்களையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களையும் இப் பள்ளியின் தாளாளர் கிருஷ்ணவேணி மணி, செயலாளர் மருத்துவர் சந்தோஷ் முதல்வர் தமிழரசன், துணை முதல்வர் விஜயகுமார் ஆகியோர் பாராட்டினர்.

;