குடவாசல், ஜூலை 25- குடவாசல் பேரூராட்சி பகுதியில் கடந்த சில நாள்களாக கொரோனா தொற்று தீவிர மடைந்து வருகிறது. இந்நிலையில் குடவாசல் மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள நபர்களுக்கு பரிசோ தனை செய்வதில் முதல் கட்டமாக 6 நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அடுத்த பரிசோதனை முடிவின்படி 11 நபர்க ளுக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் தொற்று பாதிப்பு உள்ள நபர்களிடம் நெருக்க மாக இருந்தவர்களை ஆய்வு செய்ததில், வியாழக்கிழமை வந்த ஆய்வு முடிவின்படி 12 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை குடவாசல் பேரூரராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மொத்தம் 29 நபர்க ளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி யாகியுள்ளது. அந்த பகுதிக்கு செல்லும் நான்கு வழித்தடங்களிலும் சுகாதாரப் பணி கள் மேற்கொள்ளப்பட்டன. கொரோனா பரி சோதனை ஆய்வு முடிவின்படி தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் திருவா ரூர் மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். குடவாசல் பேரூராட்சி உள்ள அனைத்து வார்டுகளிலும் வீடு,வீடாக சென்று சுகாதாரத் துறையினர் கொரோனா தொற்று பரிசோதனை செய்ய பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.