tamilnadu

img

ஓசூர் 8ஆவது புத்தகத் திருவிழா வாகன பிரச்சார துவக்கம்

கிருஷ்ணகிரி, ஜூலை 6- கிருஷ்ணகிரி, ஓசூரில் 8ஆவது புத்தகத் திருவிழா கேஏபி கல்யாண மண்ட பத்தில் வரும் 12ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 12  நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான விளம்ப ரங்கள் ஓசூர் வட்டம் முழு வதும் ஒரு மாதத்திற்கு முன்பே செய்யப்பட்டு விழிப்  புணர்வு ஏற்படுத்தப் பட்டுள்ளது. 8ஆவது புத்தகத் திரு விழா துவங்க 7 நாட்களே உள்ள நிலையில் வெள்ளிக் கிழமை (ஜூலை 5) முதல் புத்தகத் திருவிழா குறித்த வாகனப் பிரச்சாரம் துவங்கி யது. இந்த நிகழ்ச்சிக்கு புத்த கத் திருவிழா தலைவர் துரை தலைமை தாங்கினார். பிரச்சார வாகனத்தை வட்டாட்சியர் முத்துப்பாண்டி கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் புத்தகத் திரு விழா குறித்து அறிமுகம் செய்தார். ஓசூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்க துணைத் தலைவர் சீனி வாசலு, அறிவியல் இயக்க  நிர்வாகி சந்திரசேகர், பொரு ளாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.