tamilnadu

img

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை,செப். 24 - திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதியில் மணல் திருட்டை கண்டுகொள்ளாமல், அந்த மணல் திருட்டு சம்பவத்திற்கு துணையாக செயல்படும் வெம்பாக்கம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மலைவாழ் மக்கள் சங்கம்  சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.  வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பொதுச் செயலாளர் இரா. சரவணன் தலைமை தாங்கினார்.செயலாளர் சங்கர், நிர்வாகிகள் முத்து, கே. வெங்கடேசன், எம். ஆறுமுகம், எம். கன்னியப்பன், இராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பழங்குடி மக்களுக்கு சாதிச்சான்று, வீட்டுமனைப்பட்டா, குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு, தொகுப்பு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று, நிர்வாகிகள் உரையாற்றி னர்.