tamilnadu

img

பட்டாவுக்காக 35 ஆண்டுகளாக போராட்டம்

கிருஷ்ணகிரி,ஆக.21- கிருஷ்ணகிரி மாவட்டம் தேன் கனிக்கோட்டை நகரின் கிழக்கு பகுதியில் கெலமங்கலம் சாலை அருகே உள்ளது பட்டாளம்மன் கோவில் தெரு. 320 வீடுகளில் 1400க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். ஓசூர், சிப்காட், சிட்கோ தொழிற் சாலைகளிலும் கட்டுமானப் பணி மற்றும் எப்போதாவது கிடைக்கும் கூலி வேலைக்கும் நூற்றுக்கும் மேற் பட்டவர்கள் சென்று வருகிறார்கள். இந்த மக்கள் குடியிருந்து வரும் குடிசைகளுக்கு பட்டா கிடையாது. கடந்த 35 வருடமாக பட்டா கேட்டு  போராடி வரும் இந்த மக்களில் 32 நபர்களுக்கு மட்டுமே 2002 ஆம் ஆண்டில் பட்டா கொடுத்தனர். அந்த  பணியை அத்துடன் நிறுத்திவிட்டனர். பட்டா கேட்டு நடத்தும் போராட்டம் இன்னமும் தொடர்கிறது. ஒவ்வொரு தேர்தலின்போதும் புறக்கணிப்பு போராட்டத்தை அறி விக்கும் இந்த மக்களை சந்திக்கும் அதிகாரிகள், அந்த நேரத்திற்கு சமா தானம் செய்கின்றனர். அரசு அதிகாரி கள் உறுதியை ஏற்று வாக்களித்து வரும் அந்த மக்களை ஏமாற்றி வரு கிறார்கள். மக்களின் நியாயமான கோரிக் கைக்காக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில்  கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ச்சி யாக போராட்டம் நடத்தப்பட்டு வரு கிறது. கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம்  தேதி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடந்த பிரமாண்ட மறியல் போராட்டம் நடத்  தப்பட்டது. அப்போது, 665 நபர்க ளுக்கு பட்டா கேட்டு அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். அதனை பெற்றுக்  கொண்ட அதிகாரிகள் இரண்டு மாதத்திற்குள் முடிவு எட்டப்படும் என உறுதியளித்தனர். பின்னர், மக்களவை தேர்தல் முடியட்டும் பார்க்கலாம் என்றனர்.  தேர்தல் முடிந்தும் நடவடிக்கை யில்லை. இதோ, அதோ என இழுத்  தடித்து வருகிறார்கள். இதனால், கோபமடைந்த அந்த மக்கள்  பட்டா  கிடைக்கும் வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய் துள்ளனர். இந்த போராட்டமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடக்கிறது. இந்த தகவலை கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர், வட்டச் செயலாளர் வெங்கடேஷ், மாவட்டக் குழு உறுப்பினர் அனு மப்பா, வாலிபர் சங்கச் செயலாளர் முத்து, பட்டாபி, கணேஷ் ஆகி யோர் தெரிவித்தனர்.