tamilnadu

img

இரட்டை சதம் அடித்து மும்பை வீரர் சாதனை!

விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியில், மும்பை அணிக்காக விளையாடி வரும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

விஜய் ஹசாரே கோப்பைக்கான 50 ஓவர் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் மும்பை - ஜார்க்கண்ட் அணிகள் விளையாடி வருகின்றன. மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரராக களம் இறங்கிய மும்பை அணியின் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 154 பந்தில் 203 ரன்கள் குவித்து அபாரமான விளையாடினார். இதில் 17 பவுண்டரிகள், 12 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் ‘லிஸ்ட் ஏ’ (50 ஓவர் கிரிக்கெட்) போட்டியில் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியில், அறிமுகம் ஆன யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐந்து போட்டிகளில் மூன்று சதங்கள் மூலம் 504 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.