tamilnadu

img

2வது ஒருநாள் போட்டி : வெஸ்ட் இண்டீஸுக்கு 388 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

இந்திய-வெட்ஸ் இண்டீஸ் அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸுக்கு 388 ரன்களை இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியின் தொடக்கத்தில்,  டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் கேஎல் ராகுலும் களமிறங்கினர்.  ஆரம்பத்தில் இருந்தே இருவரும் ஒன்று, இரண்டு என ரன்களை எடுத்தனர். கிடைத்த பந்துகளில் சிக்சர், பவுண்டரிகளை அடிக்க தவறவில்லை. இருவரும் சிறப்பாக ஆடி அரை சதமடித்து அசத்தினர். இந்திய அணி 24 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 139 ரன்கள் எடுத்தது. 

கே.எல்.ராகுல் விக்கெட்டுக்கு பிறகு, அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து ஷ்ரேயஸ் அய்யர் களமிறங்கினார். இதனால் 35 ஓவருக்கு பிறகு இந்திய அணியின் ரன்ரேட் 6 ஆக உயர்ந்தது. அவருக்கு அய்யர் ஓத்துழைப்பு கொடுத்தார். இருவரும் இணைந்து 60 ரன்கள் எடுத்தனர். இவரை அடுத்து, களமிறங்கிய வீரர்கள் அதிரடியாக விளையாடிய நிலையில், 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி  387 ரன்களை குவித்துள்ளது. இதில் ரோகித் சர்மா 138 பந்துகளில் 5 சிக்சர், 17 பவுண்டரி என 159 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 

இதையடுத்து, 388 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது.