நான் எதிர்பார்க்கும் மூன்று வீரர்கள் நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரில் கண்டிப்பாகச் சாதிப்பார்கள். முதலில் வார்னர்(ஆஸ்திரேலியா). ஏப்ரல் மாதம் இந்தியாவில் தீவிரமான வெப்ப வானிலை இருந்தும் ஐபிஎல்-லில் ரன்கள் குவிக்கும் வேட்கையுடன் இருந்தார். பந்துவீச்சாளர்களில் ஜோஃப்ரா ஆர்ச்சரைக்(இங்கிலாந்து) கவனிப்பதில் ஆர்வமாக உள்ளேன். பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுப்பதை அவரால் கட்டுப்படுத்த முடியும். ஆர்ச்சருடன் நான் எதிர்பார்க்கும் மற்றொரு பந்துவீச்சாளர் ரஷித் கான்(ஆப்கானிஸ்தான்). உலகக்கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிகளுக்கு இவர் முக்கியக் காரணமாக இருக்கப் போகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் அளித்த பேட்டியிலிருந்து...