tamilnadu

img

மூன்றாவது டெஸ்ட் : இந்திய அணியை சரிவிலிருந்த மீட்ட ரோஹித் , ரஹானே கூட்டணி

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சரிவிலிருந்து மீண்டுள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில்,  தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய புஜாரா மற்றும் கேப்டன் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்நிலையில் இந்திய அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தவித்தது. இதனை தொடர்ந்து விளையாடிய ரோஹித் சர்மா, ரஹானே கூட்டணி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டது. இதில் ரோஹித் சர்மா சதம் அடித்து அசத்தினார். தற்போது இந்திய அணி 224 ரன்களுக்கு 3 விக்கெட் என்று விளையாடி வருகிறது. 
 

;