ஐபிஎல் தொடரின் 12-வது சீசனில் மும்பை அணி 1 ரன் வித்தியா சத்தில் சென்னை அணியை வீழ்த்தி 4-வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. சென்னை அணி வெற்றி பெறக் காலில் ரத்த காயத்துடன் போராடிய ஷேன் வாட்சன் (80 ரன்கள்) ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்ததால் சென்னை அணியின் கோப்பை கனவு தகர்ந்தது. சென்னை அணி தோற்றபோதிலும் ரத்த காயத்துடன் போராடிய ஷேன் வாட்சனின் அர்ப்பணிப்பு உணர்வை சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி நெட்டிசன்கள், இதர ஐபிஎல் அணி ரசிகர்கள் என ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஒன்று கூடிய வாழ்த்து மழை பொழிந்தனர்.இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக தனக்குப் பாராட்டுகளையும், அன்பையும் வெளிப்படுத்திய கிரிக்கெட் ரசிகர்களுக்குத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மூலம் ஷேன் வாட்சன் நன்றி தெரிவித்து உள்ளார். அந்த வீடியோவின் இறுதியில்,”அடுத்த சீசனில் ஒரு படி அதிக பங்களிப்பை அளிக்கும் நம்பிக்கையுடன் காத்திருப்பதாகக் கூறி விசில் போடு” என்று கூறி முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.