tamilnadu

img

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல்?

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச கிரிக்கெட் அணி டி-20, டெஸ்ட் என இரண்டு விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான 3 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரின் முதல் ஆட்டம் தில்லி மைதானத்தில் வரும் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டியின் போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமைக்கு மர்ம கடிதம் கிடைத்துள்ளது. கடிதம் தொடர்பான விசாரணையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் செயல்படும் அனைத்து இந்திய லஸ்கர் எனும் தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக தேசிய புலனாய்வு முகமை கூறியுள்ளது.  இந்த மிரட்டல் கடிதத்தை பிசிசிஐக்கு அனுப்ப, இந்த கடிதம் வெறும் புரளியாக இருந்தாலும் தில்லி காவல்துறை யினர் கூடுதல் பாதுகாப்பு அளிக்க பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது.

;