tamilnadu

img

கால்பந்து அணியில் சேர்ந்த வங்கதேச கிரிக்கெட் வீரர்

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதால் வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன், கால்பந்து அணியில் இணைந்து விளையாடியுள்ளார்.

வங்கதேச அணியின் நட்சத்திர வீரரும் ஆல்ரவுண்டருமான ஷாகிப் அல் ஹசன், ஊழல் அணுகுமுறைகளைப் பற்றிய தகவல்களை ஐசிசியிடம் தெரிவிக்காததால், அவரை இரண்டு ஆண்டுகள் தடை செய்தது வங்கதேச கிரிக்கெட் வாரியம். இந்தியாவிற்கு வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன் இந்த அறிவிப்பு வெளியானதால், அவரால் மூன்று டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை.

இந்நிலையில் ஓய்வில் இருக்கும் அவர், வங்கதேச ராணுவ மைதானத்தில் கொரிய எக்ஸ்பாட் அணிக்கு எதிரான போட்டியில் ஃபுட்டி ஹக்ஸ் என்கிற கால்பந்து அணியுடன் இணைந்து விளையாடியுள்ளார். இதில் ஃபுட்டி ஹக்ஸ் அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அந்த அணி தங்களுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.