tamilnadu

img

ரோஹித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

ஐபிஎல் நிர்வாகம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது.


மொஹாலியில் ஐபிஎல் டி20-யின் 9-வது லீக் ஆட்டம், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நேற்று நடந்தது. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்களை துரத்திய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியினர் பந்து வீசுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டனர். இதனால், போட்டி கூடுதலாக 30 நிமிடங்கள் நீடித்தது.


இதையடுத்து, ஐபிஎல் விதிமுறையான நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பந்துவீசத் தவறிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. இந்த சீசனில் முதல் முறையாக ஐபிஎல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக மும்பை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


;