tamilnadu

img

ரஞ்சி கோப்பை தமிழகம் படுதோல்வி

ரஞ்சி கோப்பை தொடரின் 2-வது சுற்று ஆட்டத்தில் எலைட் ஏ,பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அணி இமாச்சல் அணியை எதிர்கொண்டது. திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தமிழக வீரர் அஸ்வினின் (5 விக்.,) அசத்தலான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இமாச்சல் அணி முதல் இன்னிங்ஸில் 158 ரன்களில் ஆட்டமிழந்தது.  தமிழக அணி தனது முதல் இன்னிங்ஸில் 96 ரன்களுக்கு சுருண்டு அதிர்ச்சியளித்தது. தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய இமாச்சல் அணி 195 ரன்கள் முன்னிலையுடன் 2-வது நாள் ஆட்டத்தை நிறைவு செய்தது. 3-வது நாளிலும் தனது ரன் வேட்டையை தொடர்ந்த இமாச்சல் அணி 154 ரன்களுக்கு ஆட்டமிழந்து தமிழக அணிக்கு 216 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.   தொடக்க வீரர் முகுந்த் (48), கேப்டன் பாபா அபராஜித் (43) ஆகியோர் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் தமிழக அணி 67.5 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்து 71 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. நாட்டின் உள்ளூர் தொடர்களில் பலமான அணியாக உள்ள தமிழக அணி ரஞ்சிக் கோப்பையில் தொடர் தோல்வியை சந்தித்து வருவதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.