tamilnadu

img

கிரிக்கெட் மைதானத்திற்குள் பாம்பு நுழைந்ததால் பரபரப்பு

விஜயவாடாவில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் போது, மைதானத்துக்குள் பாம்பு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விஜயவாடாவில் ஆந்திரா மற்றும் விதர்பா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் போட்டு முடித்தவுடன், ஆட்டத்தை தொடங்க வீரர்கள் களமிறங்க தயாராக இருந்த நிலையில், இந்த பாம்பு திடீரென மைதானத்திற்குள் புகுந்தது. இதனையடுத்து மைதான பணியாளர்கள் பாம்பை விரட்டியடித்தனர். இதன் காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கியது. இது தொடர்பாக பிசிசிஐ பதிவிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.