tamilnadu

img

பிஎஸ்எல் டி-20 தொடர் : இன்று தொடக்கம்

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரைப் போல பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற பெயரில் டி-20 கிரிக்கெட் தொடரை 2016-ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வரு கிறது. தற்போது 4 சீசன் நிறைவு பெற்ற நிலையில், 5-வது சீசன் பாகிஸ்தானின் முக்கிய நகரான கராச்சியில் வியா ழனன்று தொடங்குகிறது.    தீவிரவாதிகள் தாக்குதல் காரண மாக முதல் சீசன் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அடுத்த 3 சீசன்கள் பாகிஸ்தான் மண்ணில் நடை பெற்றது. பாகிஸ்தான் மண்ணில் நடைபெறுவதால் பாதுகாப்பு பிரச்சனை யைக் காரணம் காட்டி வெளிநாட்டு வீரர்கள் பலர் இந்த பிஎஸ்எல் தொடரைப் புறக்கணித்து வந்தனர்.  ஆனால் நடப்பாண்டு சீசனில் எல்லாம் மாறிவிட்டது. சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இலங்கை, வங்கதேச அணிகளை தங்கள் மண்ணில் விளையாட வைத்து எங்கள் நாட்டில் பாதுகாப்பு பிர மாதமாக இருப்பதாகச் சுட்டிக்காட்டி யது. இதனால் நடப்பாண்டு பிஎஸ்எல் சீசனில் வாட்சன், டேரன் சமி உள்பட 36 வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்கிறார். நடப்பாண்டு பிஎஸ்எல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் அதி களவில் பங்கேற்பதால், பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.