tamilnadu

img

நோ-பால் பிரச்சனை... ஐபிஎல்-லுக்கும் தனி நடுவர்

தில்லி  
கிரிக்கெட் உலகில் அதிக பிரச்சனையை உருவாக்குவது நோ-பால் (கிரிஸ்) மட்டுமே. இந்த பிரச்சனை கள நடுவர்களால் தான் அதிகம் உருவாகும். இதனைக் கட்டுப்படுத்த சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) நவீன தொழில்நுட்பம் மூலம் 3-ஆம் நடுவரை (டிவி நடுவர்) அணுகும் வகையில் புதிய விதிமுறை ஒன்றை உருவாகியுள்ளது. இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் மோதும் டி-20 தொடர் முதல் இந்த விதிமுறை தொடங்க உள்ள நிலையில், உள்ளூர் கிரிக்கெட் உலகின் முதன்மையான 
டி-20 தொடரான ஐபிஎல் தொடரில் நோ-பால் பிரச்சனையைத் தீர்க்க தனி நடுவர் முறையை அறிமுகப்படுத்த உள்ளது. 2020 சீசனில் இந்த விதிமுறை அறிமுகமாக உள்ளது.

;