மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் தொடரின் இந்திய அணியில் தோனி இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
உலகக்கோப்பையை தொடருக்கு பின், இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் எம்.எஸ்.தோனி, ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவ்வாறு எந்த அறிவிப்பும் வராத நிலையில், இந்திய ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 4-ஆம் தேதி வரை மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்களை தேர்வு செய்யும் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
இதையொட்டி இந்திய அணியில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என்று தெரிகிறது, குறிப்பாக வரவிருக்கும் ஒருநாள், டி20 போட்டிகள் மற்றும் 2023 உலகக்கோப்பை போட்டி ஆகியவற்றை மனதில் கொண்டு சில புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு கிரிக்கெட் வாரியம் நெருக்கடி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் தொடரில், தோனி இடம்பெறுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.