tamilnadu

img

முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றுள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில்  நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் லிவிஸ் 17 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 40 ரன்களும், கிங் 31 ரன்கள் அணிக்கு சேர்த்துள்ளார். ஹெட்மையர் 41 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 56 ரன்களும், பொல்லார்டு 19 பந்தில் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 37 ரன்களும் சேர்த்தனர்.

இதையடுத்து, 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்தியா அணியின் ரோகித் சர்மா 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ராகுல்- கோலி ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் இணைந்து கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சருமாக விளாசினர். முதலில் அரை சதம் கடந்த கேஎல் ராகுல் 62 ரன்களின் வெளியேறினார். இவர் கோலியுடன் இணைந்து 100 ரன்கள் சேர்த்தார். அடுத்து இறங்கிய ரிஷப் பந்த் 18 ரன்னிலும், ஷ்ரேயஸ் அய்யர் 4 ரன்னிலும் இறுதியில், இந்தியா 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. விராட் கோலி 50 பந்துகளில் 6 சிக்சர், 6 பவுண்டரியுடன் 94 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்த வெற்றி மூலம் இந்தியா டி 20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.