tamilnadu

img

முதல் டி20 கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி டெல்லியில் நடைபெறும்: பிசிசிஐ தலைவர் கங்குலி

இந்தியா - வங்காளதேசம் இடையேயான முதல் டி20 போட்டி திட்டமிட்டபடி டெல்லியில் நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் சவுராவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 போட்டி வரும் 3-ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகம் காணப்படுவதால், கிரிக்கெட் போட்டியை அங்கு நடத்த எதிர்ப்புகள் எழுந்தன. இதனால், திட்டமிட்டபடி டெல்லியில் முதல் டி20 போட்டி நடைபெறுமா என்ற கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பிசிசிஐ தலைவர் சவுராவ் கங்குலி, முதல் டி20 போட்டி டெல்லியில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்