tamilnadu

img

ஐசிசியும், கிரிக்கெட் வீரர்களும் இனவெறிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் - டேரன் சமி

ஐசிசியும், மற்ற கிரிக்கெட் வீரர்களும், இனவெறிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் மினிசொட்டா மாகாணத்திலுள்ள மியாமி பொலிஸ் நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட், காவல் துறையினரால் படு கொலை செய்யப்பட்டார்.  காவலர் ஒருவர் தனது பூட்ஸால் மிதித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு  கடும் கண்டனம் தெரிவித்து அமெரிக்காவின் பல பகுதிகளில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.  ட்விட்டர் நிறுவனமும் அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், கருப்பு வண்ண புகைப்படத்தை வைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் தங்களது பயோவில் "பிளாக் லைவ்ஸ் மேட்டர்" (BlackLivesMatter) என குறிப்பிட்டுள்ளனர். 

இந்த நிலையில், ஐசிசியும், மற்ற கிரிக்கெட் வீரர்களும், இனவெறிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி வலியுறுத்தியுள்ளார்.