tamilnadu

img

பும்ராவுக்கு ஊக்க மருந்து சோதனை

கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றான இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்பிரித்பும்ராவிற்கு (திடீரென) திங்களன்று ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. ரத்தம், சிறுநீர் என இரண்டு விதமானசோதனைகளை அடுத்தடுத்து செய்ததால் பும்ரா பதற்றத்துடன் இருப்பதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள் ளன.பொதுவாக ஊக்க மருந்து சோதனைக்கு சிறுநீர் தான் முதல் அடிப்படை கருப்பொருள். அந்த சோதனையில் சந்தேகம் இருப்பின் ரத்த மாதிரி சோதனை நடத்துவார்கள். ஆனால் பும்ராவிற்கு ஒரே நாளில்சிறுநீர், ரத்த மாதிரிகளை அடுத்தடுத்து சோதனைசெய்துள்ளதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் ஊக்கமருந்து சோதனை நடத்துவது அபூர்வமானநிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.