இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி, மும்பையில் இன்று நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக் இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. போட்டியின் தொடக்கத்தில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்நிலையில், பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணியின், 11.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்துள்ளது. இதில், தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிக்கர் தவான் 20 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 9 ரன்களுடனும் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.