இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரர் தோனி இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னலாக (கவுரவ) உள்ளார். உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தன்னிச்சையான விடுப்பு மூலம் 2 மாதங்கள் பாராசூட் ரெஜிமெண்ட் (டெரிட்டோரியல் ஆர்மி) பிரிவில் பணியாற்ற விருப்பம் தெரிவித்து ராணுவத்திற்கு கோரிக்கை வைத்தார். இதனால் 2 மாத விடுப்பு காரணமாக விண்டீஸ் சுற்றுப்பயணத்திலிருந்து தோனி நீக்கப்பட்டார். இந்நிலையில், தோனியின் கோரிக்கையை ராணுவத் தளபதி பிபின் ராவத் ஏற்றுள்ளதால், ஜம்மு-காஷ்மீரில் நடைபெறவுள்ள பயிற்சியில் பாராசூட் தோனி கலந்துகொள்ள உள்ளார். தோனி இராணுவ லெப்டினன்ட் கர்னலாக இருந்தாலும், கள செயல்பாடுகளில் பங்கேற்க அனுமதியில்லை. ஏனென் றால் தோனிக்கு வழங்கப்பட்டிருக்கும் கர்னல் பதவி சாதாரண கற்பனை பதவி தான். பயிற்சி மட்டும் அளிப்பார்கள். பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் அனுமதிக்கமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.