உலகக்கோப்பை தொடரின் 12-வது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலை யில், செவ்வாயன்று அரையிறுதி ஆட் டங்கள் தொடங்குகிறது. மழையால் சில ஆட்டங்கள் தடைப் பட்டாலும் முன்னணி அணிகளான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கி லாந்து, நியூஸிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு கம்பீரமாக நுழைந்தன. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தென் ஆப்பி ரிக்கா, பாகிஸ்தான் அணிகள் சொதப்ப லான ஆட்டத்தால் தொடரிலிருந்து வெளி யேறியது. உலகக்கோப்பை தொடரில் களமிறங்கிய 10 அணிகளில் 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலை யில், வெளியேறிய 6 அணிகளின் தோல் விக்கான காரணங்களைப் பற்றி அலசு வோம்:
தென் ஆப்பிரிக்கா
கோப்பை வெல்லும் அணியாகக் கருதப்பட்ட தென் ஆப்பிரிக்கா அணி காயம் மற்றும் வீரர்களின் பொறுப்பில் லாத ஆட்டத்தால் வெற்றிகளைக் குவிக்க முடியாமல் திணறியது. திறமையான வீரர்கள் பலர் இருந்தும் பயிற்சி ஆட்டம் போல் விளையாடி இரண்டாம் நிலை அணிகளிடம் அடி மேல் அடி வாங்கியது. உலகக்கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் தாய்நாட்டில் விளையாடி யதைப் போல அசமந்தமாக விளையாடி யது தான் தென் ஆப்பிரிக்கா அணியின் அரையிறுதி வாய்ப்பு பறிபோனதற்கு முக்கிய காரணமாகும்.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் வீரர்கள் பந்துவீச்சில் மட்டும் சிறப்பாகச் செயல்பட்டனர் என்றாலும், தொடக்க ஓவர்களில் ரன் களை அதிகளவில் வாரி வழங்கினர். பாபர் அசாம், இமாத் வாசிம், பக்கர் ஜமான் ஆகியோர் மட்டுமே பேட்டிங்கில் ஜொலித்தனர். பிட்னெஸ் பிரச்சனை யால் அவதிப்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் பீல்டிங்கில் திணறினர். குறிப்பாக கேட்ச் பிடிப்பதென்றால் வீரர்களுக்குக் கைநடுக்கம் ஏற்படுகிறது. துடிப்பாக பீல்டிங்கில் ஈடுபட்டிருந்தால் இந்தியா, ஆஸ்திரேலியா அணி களுக்கு எதிராக வெற்றியை ருசித்து அரையிறுதிக்கு எளிதாக முன்னேறி யிருக்கலாம். பீல்டிங் பிரச்சனையால் அரையிறுதி கனவு கருகிப் போனது.
இலங்கை
எதிர்பார்த்ததை விட இலங்கை அணி நன்றாகத் தான் விளையாடியது என்றாலும், இரண்டு ஆட்டங்கள் மழையால் ரத்து செய்யப்பட்டதால் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு கானல் நீரைப் போன்று காணாமல் போனது. பந்து வீச்சு, பீல்டிங்கில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் பேட்டிங் கில் ரன் சேர்க்கத் திணறியதே நியூஸி லாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பி ரிக்கா அணிகளிடம் தோல்வியைப் பரி சாகப் பெற முடிந்தது. அறிமுக கேப்டன் கருணாரத்னாவை சீனியர் வீரர்கள் கண்டுகொள்ளாதது போல விளையாடி யது இலங்கை அணிக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தியது.
விண்டீஸ்
என்ன நோக்கத்துடன் உலகக் கோப்பை தொடருக்கு வந்தார்கள் என்றே தெரியவில்லை. தொடக்க ஆட் டத்தில் பாகிஸ்தானைப் பந்தாடிய செருக்கில் முன்னணி அணிகளைக் குறைவாக மதிப்பிட்டனர். இதன்விளைவு தொடர் தோல்வியைச் சந்தித்துத் துவண்டு போயினர். மேலும் பந்துவீச் சில் சுறுசுறுப்பின்றி சிறுவர்கள் போல ஷார்ட் பிட்ச் வகை பந்துகளை வீசியது விண்டீஸ் அணிக்கு மோசமான பின் விளைவை உருவாக்கியது.ஒட்டு மொத்த பிரிவிலும் சொதப்பிய விண்டீஸ் அணி அரையிறுதிக்குச் சென்றாலும் தோல்வியைத் தான் பரிசாக வென்றி ருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசம்
கத்துக்குட்டி அணியிலிருந்து இரண்டாம் நிலைக்கு முன்னேறியுள்ள வங்கதேச அணி எதிர்பார்த்தது போலவே முன்னணி அணிகளைத் திணறவிட்டது. வங்கதேச வீரர்கள் சாகிப் அல் ஹாசனைப் போலப் பதற்ற மில்லாமல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தால் அரை யிறுதிக்கு எளிதாக நுழைந்திருக்கும். இருப்பினும் உலகக்கோப்பையில் சிறப் பாக செயல்பட்ட வங்கதேசத்தைப் பற்றிக் குறை சொல்ல வார்த்தைகள் இல்லை.
ஆப்கானிஸ்தான்
“தோற்பது முக்கியமல்ல எப்படித் தோற்கிறோம் என்பது தான் முக்கி யம்” என்ற வாக்கியத்துக்கு ஏற்ப முன் னணி அணிகளை நடுங்கவைத்த அணி ஆப்கானிஸ்தான் நடப்பு சீசன் உலகக் கோப்பை தொடரில் வெற்றியை ருசிக்க விட்டாலும் ஆட்டத்திறனில் முன்னேற் றம் கண்டுள்ளது. பந்துவீச்சில் சற்று சொதப்பினாலும் நிகழ்காலங்களில் பல மாக வலம் வரும் என்பதில் எவ்வித சந்தே கமுமில்லை.