உலகக்கோப்பை தொடரின் 22-லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. கிரிக்கெட் உலகமே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று (டக்வொர்த் லூயிஸ் விதிப்படி) வரலாற்றைத் தக்கவைத்தது. இந்த ஆட்டத்தின் போது இந்திய அணியின் ஸ்விங் மன்னன் புவனேஸ்வர் குமார் 2.4 ஓவர்கள் வீசிய நிலையில் தசைப்பிடிப்பால் பாதியில் வெளியேறினார். புவனேஸ்வர்குமாருக்கு ஏற்பட்ட தசைப் பிடிப்பு உடல் ரீதியாக உருவாகவில்லை. பிட்ச் பகுதியின் போப்பிங் கிரீஸ் (நோபால் எல்லை) பகுதியில் பள்ளத்தால் ஏற்பட்டது. நோபால் பிரச்சனைக்கு இந்த கிரீஸ் பகுதி மிகவும் முக்கியமானது என்பதால் அந்த பள்ளத்திலிருந்து புவனேஸ்வர் குமார் காலை ஸ்விங் செய்த போது 3-வது ஓவரின் நான்காவது பந்தில் அவருக்கு காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. வலியால் அவதிப்பட்ட புவனேஸ்வர் பெவிலியன் திரும்பினார். அதன் பிறகு பந்து வீசவரவில்லை. அவர் இல்லாத குறையைத் தமிழக வீரர் விஜய் சங்கர் கவனமாக கையாண்டு இரண்டு விக்கெட்டுகளைச் சாய்த்தார். மருத்துவ அறிக்கையின் படி குறைந்தபட்சம் 2 ஆட்டங்களில் புவனேஸ்வர் குமார் விளையாடமாட்டார் எனவும், அவருக்குப் பதிலாக முகமது ஷமி விளையாடுவார் என கேப்டன் கோலி தெரிவித்தார். புவனேஸ்குமார் விலகியிருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாகப் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.