tamilnadu

img

டிரெண்டிங் வாய்ஸ்...

பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்...

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளின் மூலம் கிராமப்புற மாணவ -மாணவிகளின் திறமை கண்டறியப்படுகிறது. அவ்வாறு கண்டறியப்படும் மாணவ - மாணவிகளுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டால் உலக அளவில் சாதிப்பார்கள். பெற்றோர்தான் தங்களுடைய குழந்தைகளை விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்க உற்சாகப்படுத்த வேண்டும். அப்போதுதான் கிராமப்புற மாணவ- மாணவிகளின் திறமைகள் விளையாட்டு உலகிற்குத் தெரியவரும். இதற்காகத்தான் தேசிய அளவில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. நான் இதுவரை என்னுடைய திருமணம் பற்றிச் சிந்திக்கவில்லை. ஏனெனில் ஒலிம்பிக்கில் நம் நாட்டுக்காகத் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே குறிக்கோள்.

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து அளித்த பேட்டியிலிருந்து...