tamilnadu

img

சென்னையில் நடைபெற இருந்த ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி ஐதராபாத்திற்கு மாற்றம்

சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருந்த ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி ஐதராபாத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


தற்போது நடைபெற்றுவரும் ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி மே 12ம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி நிர்வாகம் மைதானத்தின் ஐ, ஜே, கே என்ற மூன்று கேலரி இருக்கைகளுக்கு அனுமதியை மறுத்துவிட்டது. இதனால் இறுதிப்போட்டி ஐதராபாத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இறுதிப்போட்டிக்கு பதிலாக சென்னை மைதானத்தில் லீக் சுற்றுப்போட்டி ஒன்று நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;