tamilnadu

img

அனைத்திந்திய கால்பந்து அமைப்பின் தலைவர் பிரஃபுல் சர்வதேச கால்பந்து அமைப்பின் உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார்

அனைத்திந்திய கால்பந்து அமைப்பின்(All India Football Federation) தலைவராக செயல்பட்டு வரும் பிரஃபுல் படேல் சர்வதேச கால்பந்து அமைப்பான FIFAவின்(Federation of International Football Federation) சபையில் உறுப்பினராக இந்தியாவிலிருந்து முதல்நபராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.


நேற்று மலேசியாவில் நடந்த 29வது ஆசிய கால்பந்து மாநாட்டில் இந்தியாவில் கால்பந்து விளையாட்டை நிர்வகித்து வரும் அனைத்திந்திய கால்பந்து அமைப்பின் தலைவர் பிரஃபுல் படேல் சர்வதேச கால்பந்து விளையாட்டை நிர்வகிக்கும் FIFAவின் சபையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தமுள்ள 46 உறுப்பினர்களில் 38 பேர் ஓட்டு அளித்ததில் அவர் உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார். இந்தியாவிலிருந்து சர்வதேச கால்பந்து அமைப்பின்

உறுப்பினராக தேர்தெடுக்கபடுவது இதுவே முதல்முறையாகும்.

;