tamilnadu

img

வாலிபர் சங்கம் ரத்ததானம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் காஞ்சிபுரம் நகரக்குழுவும், முருகன் நெசவாளர் குடியிருப்பு பகுதி இளைஞர்களும் இணைந்து காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை ரத்த வங்கிக்கு ரத்ததானம் செய்தனர். மறைந்த இளைஞர் மோகன் நினைவாக நடைபெற்ற இந்த முகாமில் 61 பேர் ரத்ததானம் செய்தனர். வாலிபர் சங்கத்தின் நகர துணைத் தலைவர் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், மருத்துவர் சசிக்குமார், ரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர் அருள், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் மபா.நந்தன் செயலாளர் க.புருஷோத்தமன், நகர தலைவர் சங்கர், நகர செயலாளர் செல்வராஜ், பொருளாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊரடங்கு காலத்தில் வாலிபர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலிருந்து மட்டும் 318 யூனிட் ரத்தம் தானம் வழங்கப்பட்டுள்ளது.