tamilnadu

img

செங்கல்பட்டு நீஞ்சல்மடுவு கால்வாயில் நீர் தேக்கினால் குடியிருப்புகளை தண்ணீர் சூழும் அபாயம்

செங்கல்பட்டு, அக். 26- காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு நகரின் அரு கில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் நீஞ்  சல்மடுவு கால்வாய் அமைந் துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு இந்த கால்வாயின் இரண்டு கரைகளிலும் மூன்று மதகுகள் அமைத்து சீரமைக்கப்பட்டது. இந்த  நீஞ்சல் மடுவு கால்வாயில்,  தண்ணீர் தேக்கி வைக்கப் பட்டு திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் உள்ள பொன்விளைந்த களத்தூர் உட்பட 15க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள கிரா மங்களின் விவசாய பாச னத்திற்கு, தண்ணீர் திறக்கப்படுகிறது. நீஞ்சல்மடுவுக்கு வாலா ஜாபாத் அடுத்த தென்னேரி பகுதியிலிருந்து பல கி.மீ., நீளத்திற்கு கால்வாய் அமைந்துள்ளது. இதன் மூலம், 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஏரி களுக்கு தண்ணீர் செல்கிறது.  கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் பெய்த கனமழையின் போது,  ஏரிகளில் உடைப்பு ஏற்பட்ட தால், நீஞ்சல்மடுவு கால் வாயில் அதிக நீர்வரத்து ஏற்பட்டது. இதில், கால்வா யின் அருகேயுள்ள மகா லட்சுமி நகர் முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால் குடி யிருப்புவாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் நீஞ்சல் மடுவு கால்வாயின் இரு புறங்களிலும் உள்ள கால் வாய்கள் சீரமைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டன. இத னால், கால்வாய் அமைந் துள்ள மேற்கண்ட கிராமங் களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரு கிறது. இதனால், கால்வா யில் நீர்வரத்து அதிக ரித்துள்ளதால், செங்கல் பட்டு அருகே உள்ள நீஞ்சல் மடுவு தடுப்பணையில் தண்ணீர் தேங்கி ஏரிபோல் காட்சியளிக்கிறது. மேலும், தடுப்பணை நிரம்பியதால் உபரிநீர் வெளியேறி பாலாற்றில் கலக்கிறது. இத னால், செங்கல்பட்டு அடுத்த  பாலாற்றில் லேசான நீரோட் டம் ஏற்பட்டுள்ளதால் விவ சாயிகள் மகிழ்ச்சியடைந் துள்ளனர். இதுகுறித்து, கீழ்வடி நிலக்கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: நீஞ்சல்மடுவு கால்வாயில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் மகா லட்சுமி நகர் குடியிருப்பு களை தண்ணீர் சூழ்கிறது.  இதனால், நீஞ்சல்மடுவில் குறைவான அளவு தண்ணீர்  தேக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வரு கின்றனர். எனினும், நீஞ்சல்  மடுவில் முழுமையாக தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிக ரித்தால், பொன்விளைந்த களத்தூர் ஏரிக்கு தண்ணீர்  திறக்கப்படும். அசம்பாவி தங்களை தடுப்பதற்காக நீஞ்சல்மடுவு அணையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றனர்.