tamilnadu

நெல் வியாபாரி வீட்டில் கொள்ளை

மதுராந்தகம், மே 6-மதுராந்தகத்தை அடுத்த கள்ளபிரான்புரத்தை சேர்ந்தவர் சிறீராமுலு. நெல் மொத்த வியாபாரி. ஞாயிறன்று இரவு அவர்வீட்டை பூட்டிவிட்டு மாடியில் உள்ள அறையில் குடும்பத்துடன் தூங்கினார்.இதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 46 பவுன்நகை, 1 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து அங்கிருந்துச் தப்பி சென்றுவிட்டனர்.சிறீராமுலு திங்களன்று காலையில் எழுந்து வந்து பார்க்கும் போது, வீட்டில் நகை-பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து படாளம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

;