tamilnadu

img

குடியுரிமை திருத்தத் சட்டத்தை கண்டித்து கையெழுத்து இயக்கம்

குடியுரிமை திருத்தத் சட்டத்தை கண்டித்து காஞ்சிபுரத்தில் திங்களன்று (பிப்.3) நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு திமுக நகரச் செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். கையெழுத்து இயக்கத்தை திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ துவக்கிவைத்தார். எழிலரசன் எம்எல்ஏ, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் எ.வாசுதேவன், ஆர்.சவுந்தரி, பெருநகரக்குழு செயலாளர் சி.சங்கர், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜி.வி.மதியழகன், மதிமுக மாவட்டச் செயலாளர் இ.வளையாபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாசறை செல்வராஜ் உள்ளிட்ட தோழமை கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

************

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திமுக  சார்பில் பொன்னேரியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால், என்.ஜீவா, திமுக நிர்வாகி பகலவன், மதிமுக ஒன்றியச் செயலாளர் எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.