tamilnadu

img

குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

செய்யூர், செப்.17-  காஞ்சிபுரம் மாவட்டம்,  செய்யூர் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் குறை தீர்வு முகாம் மற்றும் வட்டாட்சியர் சார்பில் நடை பெறும் ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.  எனவே மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளை கண்டித்தும், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  செவ்வாயன்று (செப்.17) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செய்யூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் வட்டச் செயலாளர் எஸ்.ரவி தலைமை தாங்கினார்.   மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வாசுதேவன்,  மாவட்டக்குழு உறுப்பினர் க.புருசோத்த மன், வட்டக்குழு உறுப்பினர்கள் மோகன், கோவிந்தசாமி, வள்ளிக்கண்ணு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;