கல்பாக்கம், செப்.12- காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் பகுதியில் இந்திய அணுமின் கழகம் சார்பில் சென்னை அணுமின் நிலையம், பாவினி அணு மின் நிலையம், இந்திரா காந்தி மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. மேற்கண்ட அணுமின் நிலையங்களில், கதிரியக்க பாதிப்பு ஏற்பட்டால் அருகில் உள்ள கிராம மக்களை பாது காப்பாக மீட்பது தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் அவசர கால ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதனடிப்படையில், இந்த ஆண்டுக்கான அவசரகால ஒத்திகை நிகழ்ச்சி விரைவில் நடத்த ப்பட உள்ளது. இதற்காக பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நகரியப்பகுதியில் உள்ள அணுமின் நிலைய கட்டிடத்தில் வெள்ளியன்று (செப்.13) நடைபெறுகிறது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் பொன்னையா துவக்கிவைக்கிறார். இதுகுறித்து, அணுமின் நிலைய நிர்வாகத்தினர் கூறுகையில், கிராமப்பகுதி மக்களிடையே அணுமின் நிலையம் மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் தொடர்பான விழிப்புணர்வு குறைந்து வருவதோடு, இதுமாதிரியான நிகழ்ச்சி களுக்கு ஒத்துழைப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. அதனால், கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு மாற்றங்களுடன் மேற்கண்ட அவசரகால ஒத்திகை நிகழ்ச்சியை நடத்த திட்ட மிட்டப்பட்டுள்ளது. அதற்கான பயிற்சிகளை வழங்குவதற்காக சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது’ என்றனர்.